Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Tuesday, March 26, 2013

ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிபாட்டு/வழி முறைகள் -4



ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிபாட்டு / தியான / வழிமுறைகள் -4 

(From the Book : அருளமுதம்)

- திரு. கர்மயோகி அவர்கள்

நம் வீட்டில் அன்னையைப் பிரதிஷ்டை செய்தல்:



ஒரு பிரபலமான ஹனுமார் கோயில். அங்கு கொண்டாடும் லக்ஷதீப திருவிழாவுக்கு ஜில்லாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வருவதுண்டு. அக்கோயிலின் பிரபலத்திற்கு முக்கியக் காரணம் அங்குள்ள குருக்கள்தான் என்பார்கள். குருக்களுக்கு ஹனுமாரிடம் ஈடுபாடு அதிகம். அவருடைய ஆர்வத்தாலேயே கோயில் பிரபலம் அடைந்தது. அவருடைய முகம் ஹனுமார் போலவே இருக்கும். குருக்கள் ஹனுமாரைத் தம் ஆன்மாவிலும், உடலும் பிரதிஷ்டை செய்துள்ளார். ஹனுமார் மீதுள்ள பக்தியால் (identification) அவருடன் ஒன்றிப்போய்விட்டார். தம் முகம்கூட தாம் வணங்கும் தெய்வத் திருவுருவம் தாங்கும் அளவுக்கு ஹனுமாருடன் குருக்கள் உள்ளும், புறமும் இரண்டறக் கலந்துவிட்டார்.

நம் வீட்டில் அன்னையைப் பிரதிஷ்டை செய்யுமுன், நாம் அன்னையை மனதில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். கண்களை மூடி உள்ளே மூடிய கண்களின் பார்வையைச் செலுத்தினால், அன்னை மனத்தில் கோயில் கொண்டுள்ளது தெரிய வேண்டும். அந்நிலைக்கு வந்த பின்னரே வீட்டில் அன்னையின் சான்னித்தியத்தை நிலைபெறச் செய்ய முடியும்.

சுருக்கமாகச் சொன்னால், வீட்டில் உள்ளவர் அனைவரும், அன்னைக்குப் புறம்பான செயல்களை விலக்கி, அன்னைக்கு முக்கியமான செயல்களை விரும்பிச் செய்தால், அன்னையை வீட்டில் பிரதிஷ்டை செய்வது எளிது. அப்படியில்லை என்றால் அதிகமான பிரயத்தனத்தால்தான் அதைச் சாதிக்க முடியும்.

நம் மனத்திலும், உடலிலும் அன்னையைப் பிரதிஷ்டை செய்தல் முதற்படி. இடையறாது மனத்தால் நினைத்தால் அன்னை அங்கு நிரந்தரமாகக் குடியேறுவார். உடலைத் தூய்மையாக வைத்துக் கொண்டு, உடலால் மனதறிந்த தவறு எதுவும் செய்யாவிட்டால், உடல் அன்னை குடியேறுவதற்குத் தகுதி உள்ளதாகிவிடும். நம் உடல் அல்லது உடலுக்குரிய சூட்சமச் சக்கரத்தில், அதாவது மூலாதாரத்தில் அன்னையைப் பிரதிஷ்டை செய்ய முயன்று, வெற்றி பெறுதல் அடுத்த கட்டம். எளிதானது இல்லாவிட்டாலும், அது பலித்துவிடும். பின்னர் நம் வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சிறிது நேரம் தினமும் நின்று

தியானம் செய்தால், நாளடைவில் வீட்டில் அன்னையிருப்பது தெரியும். 19 வயது பையன் ஓர் அன்பர் வீட்டிற்கு வந்தான். சற்றுத் தொலைவில் அவனுக்கு அவர் வீட்டிற்கு மேலே பெரிய ஒளி தெரிந்தது. யாரிடமும் சொல்லக் கூச்சப்பட்டான். அவர் வீடு மாறினார். புது வீட்டில் அவனுக்கு ஒளி சிறிதே தெரிந்தது. 3 மாதங்களுக்குப் பின்னர் புது வீட்டில் பழைய அளவுக்கு அவனால் ஒளியைப் பார்க்க முடிந்தது. பின்னர் அவன் அவரைச் சந்தித்து தான் கண்டதைச் சொல்லி விளக்கம் கேட்டான்.

பக்தருடைய இடைவிடாத தியானம் அன்னையின் ஒளி அவர் வீட்டில் வானளாவ உயரும்வரை கொண்டு வந்துள்ளது.
         
                            --------------------------------

 அன்னையை நம் வீட்டில் உள்ளவர் அனைவர் மனத்திலும் பிரதிஷ்டை செய்வது:

தம் மனதில் அன்னையைப் பிரதிஷ்டை செய்தவராலேயே இதைச் செய்ய முடியும். இடைவிடாது அன்னையைப் பக்தியுடன் நினைவுகூர்பவர்க்கு மனதில் அன்னை வந்து நிரந்தரமாகத் தங்குவார். நம் மனதில் அன்னை தங்கிவிட்டார் என்பதற்கு ஏதாவது அறிகுறி உண்டா? என்றால் முக்கியமானவற்றை மட்டும் சொல்கிறேன். ஏராளமான அறிகுறிகள் உண்டு.

1. மனம் அலாதியான சந்தோஷத்தால் நிரம்பி வழிந்து, லேசாகி, வாழ்க்கையில் பிரச்சினையே இல்லை என்று கருதும்.
2. தூக்கம் தியானம் போன்றிருக்கும். தூங்கி எழுந்தால் தியானம் கலைந்தது போன்றிருக்கும்.
3. பயம், சந்தேகம், கவலை போன்றவை எக்காரணத்தை முன்னிட்டும் எள்ளளவும் இருக்காது.
4. கண்களை மூடினால் அன்னை நெஞ்சில் இருப்பது தெரியும். உருவம் தெரியாவிட்டாலும், அன்னை இருப்பதைத் தெளிவாக உணர முடியும்.

தன் மனதில் அன்னையைப் பிரதிஷ்டை செய்ததைப் போலவே அன்னையை உணர்விலும், உடலிலும், வீட்டிலும் முழுமையாகப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இதுவே முதற்படி. சுருக்கமாகச் சொன்னால் எந்த உணர்ச்சி வருமுன்னரும் அன்னை நினைவு வந்தால் அன்னையை உணர்வில் பிரதிஷ்டை செய்தாயிற்று எனலாம். எந்தச் செயலையும் ஆரம்பிக்கும் முன்னே அன்னை நினைவு தானே வந்தால் உடலில் அன்னை உறைகின்றார் என்று பொருள். நம் வீட்டிற்கு வருபவர்கள் இது அன்னை குடி இருக்குமிடம் என்று உணர்ந்தால், நம்மிடம் சொன்னால் அன்னை நம் வீட்டிற்கு வந்துவிட்டார் என்று அர்த்தம்.

இதுவரை செய்வதே பக்தனைப் பொருத்தவரை பெரிய காரியம். அடுத்த கட்டமே அன்னையை நம் வீட்டார் மனதில் பிரதிஷ்டை செய்வது. அதையும் பூர்த்தி செய்வது யோகத்தில் வெற்றி கண்டதற்கு நிகராகும்.

நம் வீட்டில் உள்ள அனைவரும் நம்மிடம் நல்லெண்ணம், அன்பு மற்றும்  நம்பிக்கையுடையவராயிருந்தால்தான் இதைச் செய்ய முடியும். நமக்கு முரணானவர், நம்மைப் பிடிக்காதவர், நம் மீது நம்பிக்கையில்லாதவர், நம் மீது கசப்புள்ளவர்கள் மனதில் நம்மால் அன்னையைப் பிரதிஷ்டை செய்ய முடியாது. முயன்றால் பலன் எதிர்மாறாக இருக்கும். இதைச் செய்யும்பொழுது பிறரைக் கலந்து ஆலோசிக்காமலே செய்ய வேண்டும். எப்படி ஒருவருடைய மனதைத் தெரிந்துகொள்வது என்ற கேள்வி 10இல் 9 பேரிடம் எழாது. ஏதோ ஒருவர் விஷயத்தில் நாம் தெளிவில்லாமல் இருப்போம். நாம் அன்னையை இவர் மனதில் இருத்தினால் இவர் ஏற்றுக்கொள்வாரா, இல்லையா என்ற கேள்வி எழுந்தால், சுலபமாகச் சோதனை செய்யலாம்.

நாம் மனதை ஒரு நிலைப்படுத்தும்பொழுது (concentrate) தலையிலாவது, நெஞ்சிலாவது ஒரு நிலைப்படுத்துகிறோம். அதே போல் தியான அறையில் இருந்து ஆபீஸில் நம் அறையில் நாம் நம் மனதை ஒரு நிலைப்படுத்தலாம் (we can concentrate on our office while sitting in our meditation room). அதே போல் மற்றவர் மனதில் நம் எண்ணங்களை ஒரு நிலைப்படுத்தினால், அன்னையை அவர் மனதில் நாம் நினைத்தால், மாடியிலிருந்த அவர் எழுந்து உங்களை நோக்கி வந்தால், அல்லது அவர் முகம் மலர்ந்தால், அல்லது உங்கள் கருத்தை அவர் வெளியிட்டால், (நீங்கள் நினைத்தபடி அவர் செய்தால்), அல்லது பொதுவாக அவர் நல்ல காரியம் செய்தால், நீங்கள் அவர் மனதில் அன்னையை இருக்கச் செய்ததை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்று பொருள். மாறாக அன்னையை அவர் மனதில் நீங்கள் நினைத்தவுடன் அவருக்கு எரிச்சல் வந்தால், உங்களிடம் சண்டைக்கு வந்தால், உங்களைத் திட்டிப் பேசினால், கொட்டாவி வந்தால், அவர் எழுந்து நடக்கும் பொழுது மேஜை மீது இடித்துக்கொண்டால், அன்னையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை எனப் பொருள்.

பிள்ளைகளானாலும், கணவனானாலும், மனைவியானாலும், பெற்றோரானாலும், அன்னையை அவர்களுக்கு வலியுறுத்தி, அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக, கொடுக்க முயலக்கூடாது. அது தவறு; பிடிவாதமாக அதை ஒருவர் செய்தால் மற்றவரால் அவருக்குத் தீங்கிழைக்க முடியும்.

நம்மவர் அனைவரும் நம்மிடம் நல்ல எண்ணம் உள்ளவர் எனக் கொள்வோம். நம் மனதில் concentrate செய்வதற்குப் பதிலாக அவர் மனதில் வர ஆரம்பிப்பார். நம்முள் எப்படி அன்னையைப் பிரதிஷ்டை செய்தோமோ, அப்படியே மற்றவர் மனத்திலும் பிரதிஷ்டை செய்யலாம். "நான் உங்கள் நெஞ்சில் எல்லாம் குடி இருக்கிறேன்'' என அன்னை ஆசிரமவாசி ஒருவரிடம் சொல்லியது இதைத்தான். நம்முள்ளும், நம்மவர் மனதிலும், நம் வீட்டிலும் அன்னையைப் பிரதிஷ்டை செய்தவருடைய வாழ்க்கை புனிதம் நிறைந்ததாகவும், புதுமை உள்ளதாகவும் இருக்கும்.

                        ---------------------------------

- தொடரும் ...

No comments:

Post a Comment

Followers