Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Friday, May 10, 2013

அன்னையின் சூழல் வாழ்வில் செயல்படுவதை, அன்பர்கள் எப்படித் தெரிந்து கொள்ளலாம்?


அன்னையின் சூட்சுமச் சூழல் 
- திரு. கர்மயோகி அவர்கள்


அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு, மனதில் அன்னை தெய்வம் என்றுணர்ந்து, அன்னையை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில், பக்தன் மனித வாழ்க்கையின் மையத்திருந்து நகர்ந்து வந்து சூட்சும உடலின் சூழல் (physical aura of Mother) அன்னை உறையும் நிலையையடைந்து அன்னை தம்மை ஏற்றுக்கொள்ளக் காத்திருக்கும் பொழுது, அன்னை ஜோதியிலிருந்து ஒரு பொறி புறப்பட்டு அவன் ஜீவனில் வந்து தங்கி, அவனுக்கு அன்னை பக்தன் என்ற ஆத்மீகத் தகுதியை நிரந்தரமாகத் தருகின்றது. அவன் அகவாழ்வில் ஏற்படும் மாறுதல்கள் அசாதாரணமானவை; எவரும் மறக்க முடியாதவை. இதன் பிரதிபலிப்பாக புற வாழ்வில் எதிர்பாராத பெரிய நல்லவை நடக்கின்றன. நாளடைவில் இந்தப் புதுமை பழகிப்போன காரணத்தால், பழமையாகிறது. ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட ஜீவனுடைய சிறப்பும், வாழ்க்கைப் பொலிவும் தூசி படிந்து, கண்ணுக்குத் தெரியாதவண்ணம் புதைந்துவிடுகின்றன.

அன்னையின் சூழலில் நடப்பது அனைத்திற்கும் அர்த்தம் உண்டு.

  • நம் ஆபீஸ் வாழ்வில் சண்டையும் சச்சரவுமாக இருப்பதாக வைத்துக் கொண்டால், வீட்டில் சுமுகத்தை அதிகப்படுத்த முனையலாம். அதற்குரிய பலன் ஆபீஸிருக்கும். வளர்ந்த பையன் நேரத்திற்கு வீட்டிற்கு வருவதில்லை என்றால், அவன் சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களையும் தாயார் நேரத்தில் தவறாமல் செய்தால், பையன் நேரத்திற்கு வர ஆரம்பிப்பான். 

  • வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் ஏற்பட வேண்டுமானால், வீட்டில் உபயோகப்படக்கூடிய பொருள்களுக்குத் தகுந்த உபயோகம் ஏற்படுத்துவது நல்லது. யாரும் கவனிக்காத பொருள்கள், அலட்சியப்படுத்தப்பட்ட மனிதர்கள், சந்தர்ப்பங்கள், கருத்துகளை இப்பொழுது பொருட்படுத்தி அவை பயன்படும் ஒரு வாய்ப்பை முயன்று உற்பத்தி செய்தால், புதிய வாய்ப்புகள் நம்மை நோக்கி வரும்.

அன்னை சூழலின் அதிசயங்கள்


ஓர் அன்பர் தம் வீட்டு அறையொன்றில் நுழைந்தபொழுது நாற்காலியில் அன்னையின் உருவம் சிறியதாகத் தெரிந்தது. சாஷ்ட்டாங்கமாக நமஸ்காரம் செய்து, யோசனையை மேற்கொண்டார். பகவானின்  புத்தகங்கள் 10, அந்த நாற்காலியில் 1 வாரமிருந்தது தெரிந்தது. அதுவே சூட்சுமமாக அன்னை உருவமாக அவருக்குத் தெரிந்துள்ளது.

 போட்டோவில் அன்னை அசைவதும், கனவில் அன்னை வருவதும் பலரும் அறிந்தது.

-தகப்பனார் அன்னை பக்தர். மகன் நமஸ்காரம் செய்யும்பொழுது தகப்பனார்கால் அன்னை பாதமாகத் தெரிந்தது.

-அன்னைபடம் உள்ள இடங்களில் ஊதுவத்தி கொளுத்தா விட்டாலும், ஊதுவத்தி மணம் எழும்.

பக்தர்கள் வீட்டில் அன்னை, சூழலில் எப்பொழுதும் இருக்கிறார். நாம் பாராமுகமாக இருக்கிறோம். மனத்தை 1 வாரம் அல்லது 1 மாத காலத்திற்கு மெதுவாகத் தயார் செய்துகொள்ள முடிந்தால், அவர்கட்கு ஒரு யோசனை சொல்லலாம்.

 இடைவிடாத நினைவுக்கு ½மணி, ஒரு மணி எனத் தயார் செய்து 1 நாள், 24 மணி நேரம் இடைவிடாமல் அன்னையை ஒருவரால் நினைக்க முடியுமானால், அவருக்கு வீட்டில் அன்னையிருப்பது தெரியும். அந்த ஒரு நாளில்,

  • பகவான் புத்தகத்தைப் பிரித்தால் பகவான் உருவம் தெரியும்.
  • அன்னைபடம், புத்தகம், பிளஸிங்பாக்கட் உள்ள இடங்களில் வெள்ளொளி அல்லது திருவுருவம் தெரியும்.
  • நாம் எடுக்கப்போகும் பொருள்கள்மீது அன்னையின்கை தெரியும்.
  • அதேபோல் கண், மூக்குநுனி, பாதம் பல இடங்களில் தெரியும்.அந்த ஒரு நாளில் அன்னை நம் வீட்டில் சுத்தம் அதிகமாக உள்ள இடங்களிலெல்லாம் இருப்பதைக் காட்டுவார். அது அன்னை தரிசனம் நிதர்சனம்என நிரூபிக்கும். யாரிடம் பேசினாலும் அவர்கள் புருவ மத்தியில், நெஞ்சில் அன்னையின்உருவமோ, ஒளியோ தெரியும்.


வேலை தெய்வம். அதைச் செய்யும் பொழுது செய்பவரின் கைகள் அன்னையின் கையாக மாறுவதுண்டு. வேலை நடக்கும் இடத்தில் தியானத்தின் போதுள்ள சூழல் இருக்கும். பாக்டரியில் பவித்திரமாக வேலை செய்தவருக்கு மெஷின் அருகில் பொன்னிறமாக ஸ்ரீ அரவிந்தர் காட்சி அளித்தார்.

மனிதனுடைய குறை, அன்னையின் சூழலை அடைந்து அவருடலைத் தீண்டினால், குறை என்ற உணர்வே பிரபஞ்சத்தில் தன் வலுவை இழந்துவிடும்.


அன்னையின் சூழல் ஆபத்திலிருந்து காப்பாற்றிய நிகழ்ச்சி:

இந்தியப் பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சொற்பொழிவாற்ற பல வருடங்களாகச் சென்று வருவார். அதுபோன்று ஒரு முறை சென்றபோது அமெரிக்க நண்பரான கம்ப்யூட்டர் விஞ்ஞானி ஒருவரைச் சந்திக்க அவர் இருந்த ஊருக்குப் போனார். அவருடன் இரு நாட்கள் தங்கினார்.

மறுநாள் திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு 100 மைல்களுக்கு அப்பால் உள்ள கல்லூரியில் சொற்பொழிவு. ஞாயிறு மாலை புறப்பட்ட அவரை விஞ்ஞானி நண்பர் மறுநாள் காலையில் போகலாம் எனக் கேட்டுக்கொண்டதை மறுத்து, பேராசிரியர் புறப்பட்டுச் சென்றார். திங்கள்கிழமை காலை 8.00 மணிக்குச் செய்தியில் முதல் நாள் அவர் தங்கி இருந்த பகுதியில் சூறாவளியால் சேதம் என்று அறிவித்தார்கள். பேராசிரியர் நண்பரைப் போனில் கூப்பிட்டு விசாரிக்க நினைத்த அதே நேரத்தில் நண்பரிடம் இருந்து போன் வந்தது. விஞ்ஞானி நண்பர் போனில் பேசினார். தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் ஆபத்து இல்லை என்றார். பேராசிரியருக்கு நிம்மதி ஏற்பட்டது. தாம் முன்னிரு தினங்களும் நண்பர் வீட்டில் தங்கியிருந்த பொழுது அன்னை படத்தின் முன் அமர்ந்து தியானம் செய்தது நினைவுக்கு வந்தது. அன்னைக்கு நன்றி தெரிவித்து விட்டு சொற்பொழிவு ஆற்றப்போனார். அது முடிந்தவுடன் நேரே நண்பர் தங்கிய இடத்திற்குச் சென்றார். 90 வீடுகள் மட்டுமே கொண்ட செல்வர் காலனி வீடுகள் தரைமட்டமாக இருந்தன.
மரங்களைக் காணவில்லை; எங்கும் காற்றின் அமர்க்களம்; உயிர்ச்சேதம் அதிகம். நண்பருடைய மாடிவீடு மட்டும் நிலைகுலையாமல், ஆடாமல், அசையாமல் இருப்பதைக் கண்ட பேராசிரியர் ஸ்தம்பித்துப் போனார். அவர்கள் வீடும் காரும் அருகில் உள்ள 150 அடி மரமும் சேதம் அடையவில்லை. மரத்தின் ஒரு கிளை உடைந்து காரின் கண்ணாடிக்குச் சிறியசேதம். பேராசிரியரை விஞ்ஞானி நண்பர் மீண்டும் மீண்டும் கேட்டார், "எப்படி நான் காப்பாற்றப்பட்டேன்?'' பேராசிரியர் அன்னையின் அற்புதங்களை 20 ஆண்டுகளாகப் பலவகைகளில் பார்த்திருக்கிறார். 'இப்பொழுது நடந்தது நம்பமுடியாத ஒன்று. நண்பரின் வீடும், அதன் உறுப்பினர்களும் முழுமையாகக் காப்பாற்றப்பட்டார்கள் எனில் அன்னையின் அருள் அவருடைய வீட்டை இரும்புக்கவசமாகச் சூழ்ந்திருக்கவேண்டும்' என்றெல்லாம் நினைத்த பேராசிரியர், "அன்னையின் படம் 2 நாள் உங்கள் வீட்டில் இருந்தது; அதனுடைய பலன்தான் இது'' என்றார்.


இதிலிருந்து நாம் அறிந்துகொள்வது:

. அன்னையின் படம், பேராசிரியர் தியானம் இவை அன்னைச் சூழலை அங்குக் கொண்டு வந்தது. அன்னைச் சூழல் அன்னையின் அருள்.

. பேராசிரியர் 20 ஆண்டுகளாக அன்னையின் அன்பர். அவருக்குச் சூறாவளியின் அசுரத்தனம் தெரியாமல் இருக்க அந்த இடத்தைவிட்டு சூறாவளி வரும் முன் அகற்றப்படுகிறார்.
. அன்னை அன்பர்களை அன்னை காப்பாற்றுவதில் எப்பொழுதும் ஓர் உயர் தனிச்சிறப்பு இருக்கும்.


அன்னையின் சூழல் பாதுகாப்பு தரும் :

எல்லாம்வல்ல அன்னையின் சக்தி உலகெங்கும், பிரபஞ்சமெங்கும் பரவியுள்ள ஆன்மீக சூட்சும ஸ்தாபனம். அந்த ஸ்தாபனத்தின் கிளை நம்முள் உள்ள ஆன்மா என்ற உருவில் இருப்பதால் நாம் எந்த நேரமும் நம் உள்ளுறை ஆபீஸிலிருந்து அன்னையின் சக்தி என்ற ஸ்தாபனத்தோடு தொடர்புகொள்ளலாம்'' - அப்போது அன்னையின் பாதுகாப்பு தவறாமல் கிடைக்கும் என்று பாதுகாக்கப்பட்டவர்களும், பாதுகாப்பு தேவையானவர்களும் அறிய வேண்டும். நம் விருப்பம் அன்னையை நாம் அறிய விரும்பும் விருப்பமாக இருக்க வேண்டும். விரும்பியபிறகு அன்னையை அழைத்துச் செயல்பட வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் நமக்கு வரும் ஆபத்து, கஷ்டங்கள், நஷ்டங்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். பாதுகாப்பு என்ற காகிதப்பூக்களை பிரசாதமாக நம்முடன் வைத்திருந்தாலும் பாதுகாப்பு கிடைக்கும். அன்னையின் சூழலிலிருந்தால் பாதுகாப்போடு அதிர்ஷ்டமும் நம்மை வந்து அடையும்.

No comments:

Post a Comment

Followers