Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Thursday, January 31, 2013

Tamil- Audio : ஸ்ரீ அரவிந்தாசரமமும், ஆரோவில்லும் நிர்மாணிக்கப் பட்டதற்கான காரணங்களும், அவற்றின் சிறப்புக்களும்.




Audio : Tamil  : Book Reading Online Version 

Topic:  ஸ்ரீ அரவிந்தாசரமமும், ஆரோவில்லும் நிர்மாணிக்கப்பட்டதற்கான காரணங்களும், அவற்றின் சிறப்புக்களும். 




File:Matrimandir.JPG
Matri Mandir at Auroville -
Image Source : http://en.wikipedia.org/wiki/File:Matrimandir.JPG 

Book : எல்லாம் தரும் அன்னை - ஸ்ரீ கர்மயோகி அவர்கள் 

(Book Reading Program - Sunday Jan 27, 2012)  - 9 mins.

Dear Sri Annai & Sri Aurobindo Devotees,
Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Mrs. Janaki, a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil

Click this link to Play the Audio


Player 1:

======================================= Player 2

       Next Book Reading Program on , Jan 27, 2012 @ Auromere Meditation Center  (9-10 AM)




யோகத்துக்குப் புது இலட்சியம் ஒன்றைக் கற்பித்த ஸ்ரீ அரவிந்தர், ‘வாழ்க்கை எப்படிச் சத்திய ஒளியாக மலர வேண்டும்?’ என்பதை விளக்கி அதன்பாற்பட்ட யோகக் கருத்தை Life Divine என்ற நூல் மூலம் தெரிவிக்கின்றார். அன்னை தம் வாழ்க்கையை முழுதுமாக ஸ்ரீஅரவிந்தருடைய இலட்சியத்திற்கு அர்ப்பணித்தபிறகு, ‘உலகில் அந்த இலட்சியம் செயல்படுவதற்கு முதல் கட்டமாக ஓர் ஆசிரமம் நிறுவப்பட வேண்டும்’ என்று கருதினார். மகான் ஸ்ரீ அரவிந்தர் அந்தக் கருத்திற்கு இசைவு தந்தார்.



1968-இல் ஆரோவில் நிர்மாணிக்கப்பட்டபொழுது, ‘ஆரோவில் உள்ளவரை மூன்றாவது உலகப்போர் மூளாது’ என்று கூறினார் அன்னை. இன்றுவரை மூளவில்லை.



ஸ்ரீ அரவிந்தரையும் அன்னையையும் பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு ‘ஆரோவில்’ என்ற உலகப் பொது நகரில் வாழ்ந்துறையும் பன்னாட்டு மக்கள், அவ்வாறு ஏற்படும் சிறு மோதல்களை ஸ்ரீ அரவிந்தரின் பொன்னொளிக்குச் சமர்ப்பித்துத் தீர்வு காண முயலும்பொழுது உலகில் பெரு மோதல்கள் தவிர்க்கப் படுகின்றன.



இந்த முயற்சி முழு வெற்றி அடைவதற்காகவே அன்னை ஆரோவில்லுக்குத் தலைவர் என்ற ஒருவரை நியமிக்கவில்லை; சட்ட திட்டம் எதையும் ஏற்படுத்தவில்லை.



1950-இல் மகான் ஸ்ரீ அரவிந்தரின் யோகம், அவரைப் பொறுத்த வரையில் சித்தித்துவிட்டது. ஆசிரமம் ஏற்படுத்தியதன் நோக்கம் ஓரளவு பூர்த்தியாகிவிட்டது. ஸ்ரீ அரவிந்தருக்குப்பின் அன்னையே ஆசிரமப் பொறுப்போடு சேர்த்து யோகப் பொறுப்பையும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. அதனாலும், ஆசிரமம் ஏற்பட்டதன் நோக்கம் ஓரளவு பூர்த்தியாகிவிட்டாலும், அன்னை அதிக அளவில் சாதகர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. 1973-இல் அன்னை சமாதி அடையும்வரை இந்நிலையே நீடித்து வந்தது.




அன்னை தம் இறுதிக் காலத்தில் ஆசிரமத்தில் சேர விரும்பிய பிரெஞ்சுக்காரர் ஒருவருக்கு, “அது தேவை இல்லை. இருக்கும் இடத்திலேயே யோகத்தை மேற்கொள்ளலாம்” என்று பதில் அளித்துவிட்டு, மேலும் கூறினார்:

“நீங்கள் இனிமேல் ஆசிரமத்தில் சேர்ந்தால், உங்கள் ஜீவனின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் சிரமங்கள் கட்டுக்கு அடங்காமல் வெளிப்படும்.

நீங்கள் வெளியில் இருக்கும்பொழுது, அந்தச் சிரமங்கள் உங்களுக்குள்ளிருந்து கிளர்ந்து வாராமல், வெளியிலிருந்து பிரச்சினைகளின் உருவில் வரும். உள்ளிருந்து கண்ணுக்குத் தெரியாமல் வரும் சிரமங்களைச் சமாளிக்க மனித சக்தியால் இயலாது.

ஆனால், கண்ணுக்குத் தெரிந்து வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளை மனித சக்தியால் எதிர்கொள்ள முடியும்; வெல்லவும் முடியும்”.
ஸ்ரீ அரவிந்தாசிரமம் என்பது எது?” என்ற ஒரு கேள்விக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு முறை ஸ்ரீ அரவிந்தர் கூறினார்;

“ஆசிரமம் என்பது நான் இருக்கும் இந்தக் கட்டிடத்தை மட்டும் அன்று;

சாதகர்கள் உள்ள எல்லா இடங்களையும் குறிக்கும், சாதகர்கள் எங்கு இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் உள்ள எல்லா இடங்களுமே ஆசிரமந்தான்”.  








Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி Tamil- Audio: அன்னையின் அன்பர் என்ற தகுதியைப் பெற ஒருவர் என்ன செய்ய வேண்டும் ?

No comments:

Post a Comment

Followers