Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Tuesday, January 22, 2013

Tamil- Audio: அன்னையின் அன்பர் என்ற தகுதியைப் பெற ஒருவர் என்ன செய்ய வேண்டும் ?



Audio : Tamil  : Book Reading Online Version 

Topic:  அன்னையின் அன்பர் என்ற தகுதியைப் பெற செய்ய வேண்டியன யாவை ?


Book : அன்னையின்  தரிசனம் - ஸ்ரீ கர்மயோகி அவர்கள் 

(Book Reading Program - Sunday Jan 20, 2012)  - 6 mins.

Dear Sri Annai & Sri Aurobindo Devotees,
Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil

Click this link to Play the Audio


Player 1:

======================================= Player 2


       Next Book Reading Program on , Jan 27, 2012 @ Auromere Meditation Center  (9-10 AM)




அன்னையின் அன்பர் என்ற தகுதியைப் பெறஅன்பர்களுக்குத் தேவையானவை மூன்று. அவை:

(1) நம்பிக்கை,

(2) பக்தி,

(3) இடையறாத தெய்வச் சிந்தனை.







  ‘நாம் வேண்டும் என்று கேட்டதைத் தவறாமல் கொடுக்கும் ஆற்றலுடையது அன்னையின் அருள்’ என உறுதியாக நம்புவது நம்பிக்கை. எந்தக் காரியத்தைச் செய்தாலும் அன்னையை மனத்தால் பணிந்து செய்வது பக்தி. மனத்தை எப்பொழுதும் அன்னையிடம் பதித்து வைத்திருப்பது இடையறாத தெய்வச் சிந்தனை.





உதாரணமாக, ‘பெண்ணுக்குத் திருமணம் செய்ய வேண்டும்’ என்று நிச்சயித்து, அதைச் செயல் வடிவில் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படும் செயல்கள் முதல் வகையைச் சேர்ந்தவை.



இதுவன்றி, அன்றாட வாழ்க்கையில் உண்பது, உறங்குவது, எழுதுவது, பேசுவது, நடப்பது, உட்காருவது, குளிப்பது, விளையாடுவது போன்ற பல செயல்களிலும் நாம் ஈடுபடுகின்றோம். இவை இரண்டாவது வகையைச் சேர்ந்தவையாகும்.



நம்பிக்கையும், பக்தியும் முதல் வகையைச் சேர்ந்த செயல்களில் வெளிப்பட வேண்டும். இடையறாத தெய்வச் சிந்தனை இரண்டாவது வகையான செயல்களில் கலந்து நிற்க வேண்டும்.



ஒவ்வொரு கட்டத்திலும் தடைகளோ அல்லது சிக்கல்களோ ஏற்படலாம். ஏதாவது ஒரு கட்டத்தில் திருவருளின் துணையை நாடாமல் நாம் செயல்பட்டிருப்பதே அவை ஏற்படுவதற்குக் காரணமாகும்.



இந்தக் காரணத்தை உணர்ந்தவுடன், ‘நான் செய்தது தவறு’ என்று மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், நடுவில் வந்த சிக்கலோ அல்லது இடையூறோ விலகிப்போகும்.



அப்படிச் செய்யத் தவறிவிட்டால், மேற்கூறிய சிக்கல்களினால் மனம் குழம்பி, சந்தேகம் எழுந்து, நம்பிக்கை உறுதி இழந்து அழிந்துபோகும் நிலை ஏற்படும்.



அதற்கு மாறாக, மேற்கூறிய முறைப்படி சிக்கல்களை விலக்கிக் கொண்டால், சந்தேகமும் எழாது; நம்பிக்கையும் தொடர்ந்து உறுதிப்பட்டுவிடும்.



உண்ணல், உறங்கல், உறங்கி விழித்தல், வீட்டை விட்டு வெளியேறிச் செல்லல், திரும்ப வீட்டுக்கு வருதல்,
குழந்தை, மனைவி, தாய், தந்தை, சகோதர சகோதரியர், உறவினர், நண்பர் போன்றோரிடம் ஏதேனும் உதவியைப் பெறுதல்
அல்லது உதவி செய்தல், நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ வரவேற்று உபசரித்தல், அல்லது வழி அனுப்பி வைத்தல்
போன்றவை மிகவும் முக்கியமானவை.



அச்செயல்களை எல்லாம் செய்யும் பொழுது மனம் அன்னையிடம் பதிந்தவண்ணம் இருக்கப் பழகிக்கொள்ளவேண்டும்.



அதன் காரணமாக இடையறாத தெய்வச் சிந்தனையானது நம்மிடம் நிலைபெற்றுவிடும்.



நம்பிக்கை, பக்தி, இடையறாத தெய்வச் சிந்தனை ஆகிய மூன்றையும் பெற்றவர், ‘அன்னையின் அன்பர்’ என்ற தகுதியைப் பெற்றவராகிறார்.



இந்த மூன்றையும் அடைந்தவர்களுக்கு எந்த நாளும் இன்பமேயன்றித் துன்பமே இல்லை.  








Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி Tamil- Audio: அன்னையின் அன்பர் என்ற தகுதியைப் பெற ஒருவர் என்ன செய்ய வேண்டும் ?

No comments:

Post a Comment

Followers