Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Thursday, September 27, 2012

அதிகாரம் நிர்வாகத்திற்கு அவசியம் - Message of the Day, Sep 27, 2012


  

மேல் அதிகாரி சொல்லிய சிறு வேலைகளைச் செய்யாவிட்டால் தண்டிக்கமாட்டார்கள், கண்டிப்பார்கள். சில சமயங்களில் கண்டிப்பதும் இல்லை. சோம்பேறித்தனமாக இது போலிருப்பதுண்டு வேண்டு மென்றே செய்வதுண்டு (desire to cross authority). அந்தச் செயல் எவ்வளவு சிறு செயலானாலும் அது தவறு. நமக்குள்ள முன்னேற்றத்தை அது தடுக்கும். ஒரு மெஷினைப் பூட்டும்பொழுது ஒரு மறை குறைவாக விட்டுவிட்டால், மெஷின் ஓடும், ஆனால் அதன் திறமை 25% குறைந்துவிடும் என்பதை இன்ஜீனியர் அறிவார். 98.40 F இருக்க வேண்டிய டெம்பரேச்சர் 99.4 இருந்தால் உடல் வேலை செய்யும் திறன் அளவு கடந்து பாதிக்கப்படும் என்பதை டாக்டர் அறிவார். Authority அதிகாரம் என்று நமக்கு வேண்டாததன்று அதுவே உலகத்தின் சொத்து. ரோடில்லாவிட்டால் வாழ்க்கையில்லை, தபால் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது. இவற்றை நடத்துவது நாட்டின் நிர்வாகம். நிர்வாகம் அதிகாரத்தால் இயங்குகிறது. வீட்டிலும், வெளியிலும் நாம் அதிகாரத்திற்கு அறிவோடு பணிந்தால்தான் நாட்டில் அதிகாரம் இயங்கும். ஏதோ ஒருவன் அவன் அதிகாரியை எதிர்க்கிறான் என்பது வேறு. நமக்கு அதிகாரியை எதிர்க்கும் மனப்பான்மை வந்துவிட்டால், நாளைக்கு நாம் அந்த அதிகாரத்தைப் பெறமுடியாது. அதிகாரம் நிர்வாகத்திற்கு அவசியம். மனித வாழ்வுக்குக் காற்றும், நீரும் அவசியம் என்பதைப் போல் அவசியம்.
அதிகாரத்தையும் அதன் அவசியத்தையும் புரிந்து கொள்வது நம் சொந்த வாழ்வின் எதிர்காலத்தையும் அதன் வளர்ச்சியையும் புரிந்து கொள்வதாகும். எண்ணத்திலும் அதிகாரத்திற்கு எதிராக போகும் நிலை எழக்கூடாது.
இரு விஷயங்களுக்குள்ள தொடர்பை நீ பார்க்கத் தவறியதுண்டா? இரு விஷயங்களுக்கிடையே இல்லாத தொடர்பை இருப்பதாக நீ நினைத்தது உண்டா? அப்படியானால் அது உன் வாழ்வில் நிரம்பியிருக்கும் அதற்கு மடமை எனப் பெயர்.
Manitha Subhavam, Malarntha Jeeviyam July-2000 - Sri Karmayogi Avarkal

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam
               










No comments:

Post a Comment

Followers