Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Monday, September 24, 2012

நம் குறைகளில் இருந்து விடுபடுவது எப்படி? - Message of the Day - Sep 24, 2012


  


நம் குறைகளில் இருந்து விடுபடுவது எப்படி ?

  • நம்மிடமும், நம் பெற்றோரிடமும் உள்ள குறைகள் நம் எதிர்காலமாக அமைகின்றன. நம்முடைய நிகழ்காலத்தில் ஏற்படுகின்ற துன்பங்களுக்கும் அந்தக் குறைகளே காரணங்களாகும்.
  • நம்மை வாட்டும் துன்பங்களை விலக்கவும், எதிர்கால வாழ்வைச் சிறப்பாக வகுக்கவும், அந்தக் குறைகளைக் கண்டுபிடித்து, அவற்றை அடியோடு நீக்கிவிட வேண்டும். சில குறைகளை அறிந்துகொள்ள முடியும்; சில குறைகளை அறிந்துகொள்ள முடியாமலே போகலாம். அதைப் போல் சில குறைகளால் வரும் துன்பங்களை நம்மால் அடையாளம் புரிந்துகொள்ள முடியும்; பலவற்றுக்குத் துன்பங்கள் மட்டும்தான் புரியும்; ஆனால் அந்தத் துன்பங்களைத் தூண்டிவிட்ட முறைகள் என்ன என்பது புரியா.
  • குறைகள் எந்த வகையாக இருந்தாலும் அவற்றை நம்மால் அழிக்க முடியாது; மற்றவர்களாலும் அழிக்க முடியாது; அவற்றை அழிக்கும் ஆற்றல் அன்னையின் அருளுக்குத்தான் உண்டு. நம்பிக்கையோடும், பக்தியோடும் அன்னையின் அருளை நாடி, அந்தக் குறைகளை நீக்கும்படி வேண்டிக் கொண்டால், அன்னை அந்தக் கோரிக்கையை உடனே நிறைவேற்றி வைப்பார். அல்லது நம் குறைகளை எல்லாம் அன்னையின் பாதாரவிந்தங்களில் ஒப்படைத்துவிட்டால், அவர் அவற்றை இருந்த சுவடு தெரியாமல் போக்கி அருள்வார். நம் நிகழ்காலமும், எதிர்காலமும் மகிழ்ச்சிகரமாக அமையும்; நம்மை அழுத்தி வந்த பளு நீங்கும்; நடக்காது என்று கைவிடப்பட்டவை நடக்கும்; ‘வாராது’ என்று விட்டுவிடப்பட்டது தன்னாலேயே வந்து சேரும். நம்மிடம் உள்ள குறைகளை விலக்கிக்கொள்ளும் முயற்சியை தினமும் முறையாகச் செய்து வந்தால், வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகி இன்பம் பெருகும்.

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam
               








No comments:

Post a Comment

Followers