Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Tuesday, August 7, 2012

கற்பனா சக்தியினால் பிரச்சனைகளை தீர்த்தல் (Power of Visualisation) - Message of the Day, August 7, 2012


  


Power of Visualisation (கற்பனா சக்தி)

ஸ்ரீ அன்னையின் அருளைப் பெறுவதற்கும், வாழ்வில் நாம் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும் தவத்திரு கர்மயோகி அவர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கூறியுள்ளார். அவற்றுள் ஒன்றான கற்பனை செய்யும் முறையின் (Visualisation) மூலம் நம்முடைய வாழ்வின் பல்வேறு பிரச்சனைகளுக்கு வெற்றிகரமாகத் தீர்வு காண முடியும்.

  • வேலை தேடும் அன்பர்கள் அல்லது வேறு நல்ல பதவி அல்லது பதவி உயர்வு வேண்டுபவர்கள், ஸ்ரீ அன்னை, தங்களிடம்  தாங்கள் விரும்பும் பதவிக்கான வேலை நியமன உத்திரவில் (Appointment order ) கையெழுத்திட்டு தருவதாக மனக்கண்ணால் கற்பனை செய்து பலன் பெறலாம்.

  • போதுமான வருமானமில்லாத அல்லது அவசரப் பணத்தேவையுடன் இருக்கும் அன்பர்கள் தங்களுக்குத் தேவையான பணத்தை அல்லது மாத வருமானத்தை (ஊதியத்தை), பணமாகவோ  அல்லது காசோலையையாகவோ  ஸ்ரீ அன்னையிடம் இருந்து பெற்றுக் கொள்வதாக கற்பனை செய்து பெரும் பலனைப் பெறலாம்.

  • சொந்தமாக ஒரு அடுக்குமாடி குடியிருப்போ அல்லது தனி வீடோ வேண்டுபவர்கள், தங்களை ஸ்ரீ அன்னை, அந்த வகை வீட்டிற்கோ அல்லது குடியிருப்பிற்கோ அழைத்துச் சென்று, அதற்குரிய சாவியையும் தஸ்தாவேஜுக்களையும், தம்மிடம் நேரில் தருவதாக கற்பனை செய்து பலன் அடையலாம்.

  • நோயால் அவதிப்படும் அல்லது சுகவீனமாக இருக்கும் அன்பர்கள்,  தங்களது தலையில், ஸ்ரீ  அன்னை, தன் திருக்கரங்களை வைத்து, நோயை குணமாக்கும் சக்தியை தங்கள் உடலுக்குள் செலுத்துவது போலவும், அதன் மூலம் தாங்கள் அந்நோயிலிருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெறுவது போலவும் கற்பனை செய்தால், பூரண குணம் அடையலாம்.

  • கடன்பட்டுள்ள அன்னை அன்பர்கள், தங்களது முன்னிலையில், ஸ்ரீ அன்னை, சம்பந்தப்பட்டவர்களிடம் கடனை திருப்பித் தருவதாக கற்பனை செய்வதன் மூலம், தங்களது எல்லாக் கடன்களையும் தீர்க்க முடியும். 

  • திருமணம் கைகூடுவதில் காலதாமதமோ அல்லது தடைகளோ ஏற்பட்டால், ஸ்ரீ அன்னை, தங்களுக்குத் திருமண மோதிரம் மற்றும் திருமாங்கல்யத்தை தங்களுடைய திருக்கரங்களால் தருவதைப் போலவும், ஸ்ரீ அன்னையின் முன்னிலையில் மாலை மாற்றி தம்பதியராகஆவது போலவும் அன்பர்கள் கற்பனை செய்து பிரார்த்தித்து வந்தால், திருமணத் தடை நீங்கி பலன் பெறலாம்.

  • தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற எண்ணும் மாணவர்கள், தங்களது தேர்வுத்தாளில், தங்களுக்கு விருப்பமான மதிப்பெண்களை,  ஸ்ரீ அன்னையே எழுதி தனது கையொப்பமிட்டுத் தருவதாக கற்பனை செய்து வெற்றி காணலாம். 

  • வெளிநாட்டுப் பயணம் செய்ய விரும்பும் அன்பர்கள், தாங்கள் செல்ல விரும்பும் நாட்டிற்கான விசாவில், ஸ்ரீ அன்னையே கையெழுத்திட்டு அருளை வழங்குவதாக கற்பனை செய்யலாம்.

  • உற்றார், உறவினர்களுடன்  அல்லது நண்பர்களுடன் சுமூகமான உறவு வேண்டுமென நினைப்பவர்கள், சம்பந்தப்பட்ட நபர்களுடனும்,  தன்னுடனும், ஸ்ரீ அன்னையே பேசிசுமூகமான சூழலை உருவாக்குவதன் மூலம், பிணக்கம் நீங்கி, ஒருவற்கு ஒருவர் கைகுலுக்கியோ அல்லது நட்பு மலர பழகுவதாகவோ கற்பனை செய்து சுமூகத்தைப் பெறலாம்.

  • குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர்கள், தங்களது விருப்பப்படி ஒரு நாள் நிரம்பிய ஆண் அல்லது பெண் சிசுவை ஸ்ரீ அன்னையின் திருக்கரங்களில் இருந்து பெற்றுக் கொள்வதாக கற்பனை செய்து பலனடையலாம்.

  • சொத்து, பணம், பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, பத்திரங்கள் அல்லது விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை இழந்த / தொலைத்த அன்பர்கள், ஸ்ரீ அன்னையே அவற்றை தங்களிடம் நேரடியாகக் கொடுத்து, வாழ்த்தி, இனி பொறுப்போடும், பாதுகாப்போடும் இருக்குமாரு கூறுவதாக கற்பனை செய்து, இழந்த உடைமைகளை மீட்கலாம்.

  • வியாபாரம், தொழிற்சாலை மற்றும் தொழிலில் சுணக்க நிலை இருந்தால், ஸ்ரீ அன்னை, பெருமதிப்புடைய நுகர்வோர்களுடன் வந்து, அன்பரிடம் பல பெரிய ஆர்டர்களை (0rders) வழங்கி, தொழிற்சாலையையும் வியாபாரத்தையும் மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவதைப் போல கற்பனை செய்து பெரும் லாபத்தை அடையலாம்.

  • மின்தடை ஏற்படும் பொழுது, அதனால் பாதிக்கப்படும் அன்பர்கள், ஸ்ரீ அன்னை தங்களது வீட்டிற்கு வந்து அருளை வழங்குவது போலவும், உடனே மின்தடை நீங்குவதாகவும் மனதால்  கற்பனை செய்தால், மின்தடை நீங்குவதைக் காணலாம்.

  • துயரத்தாலும், சோகத்தாலும் சந்தோஷமின்றி இருக்கும் அன்பர்கள், தாங்கள் ஒரு வயது நிரம்பிய குழந்தையாகி, ஸ்ரீ அன்னையின் மடியில் தவழ்வது போலவும், ஒரு தாயார் போல, ஸ்ரீ அன்னை அவர்களது திருக்கரங்களால் அக்குழந்தையை வருடிக் கொடுப்பது போலவும் கற்பனை செய்து துன்பம் நீங்கப் பெறலாம். 

சில நேரங்களில் புதிதாக ஒரு சவாலோ சோதனைகளோ நம் வாழ்வில் வரலாம். இந்த எதிர்மறை நிகழ்வுகள், ஸ்ரீ அன்னையுடம் நமக்கு நெருக்கமான மற்றும் ஆழ்ந்த பூரணமான நம்பிக்கையை ஏற்படுத்தித் தரும் நல்விளைவாக அமைகின்றன. இம்மாதிரி சூழ்நிலைகளில், ஸ்ரீ அன்னையிடம் மேலும் மேலும் முழு சரணாகதி அடைந்து, எண்ணங்களால் உயர்ந்து, ஸ்ரீ அன்னையின் அருளை அபரிமிதமாகப் பெறமுடியும்.
Ref: Karmayogi.net

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.
TN, India.

Tags: Problem Solution Solving Face How to face Problem Visualisation Methods Practices  daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Janaki 
               

No comments:

Post a Comment

Followers