Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Friday, August 17, 2012

Audio - Tamil - Annaiyin Muraikal - A conversation - Part 2

Audio : Tamil  - அன்னையின் முறைகளைப் பற்றிய உரையாடல் - Part 2

Book Name: "ஸ்ரீ அன்னையும் அரவிந்தரும் " - ஸ்ரீ கர்மயோகி அவர்கள் எழுதியது.

(Book Reading Program - Aug 10, 2012) - ( Duration : 3 mins.)

Dear Sri Annai & Sri Aurobindo Devotees,
Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Mrs. Janaki, a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.
Play the following audio Players or the link to listen to the Audio Version - English

Click this link to Play the Audio


Player 1:  

=======================================

  அன்னையின் முறைகளைப் பற்றிய உரையாடல் - Part 2


அன்னையை வாழ்வில் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளுதல் முழு யோகம் என்பதால், அதைக் கருதாது, ஏதாவது ஒரு முழுக் காரியம் (complete act) அன்னையால் நிரப்பப்பட்டு அன்னையின் புதுமை பொலிவுற வெளிப்படுதல் எப்படி என்பதை மட்டும் கருதுவோம்.


தீவிர பக்தர் எவராலும் இதைச் செய்ய முடியும் என்பதால் இதை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.


நாம் எடுத்துக்கொண்ட செயலின் எல்லாச் சிறு பகுதிகளிலும் அன்னையை நினைவுகூர்ந்தால் அன்னை அச்செயலில் வெளிப்படுவார்.




கடைக்குப் போவதை ஒரு முழுக் காரியமாகக் கொண்டு இந்தச் சோதனையைச் செய்யலாம். கடைக்குப் போவதுடன் தொடர்புள்ள எல்லாச் சிறு செயல்களிலும் அன்னையை நினைத்துச் செயல்பட்டால், போய் வந்தவுடன் அன்னை அச்செயல் முழுவதுமாகப் புதுமையை நிரப்பித் தம் முத்திரையிட்டது தெரியும்.


கடைக்குப் போவது என்ற காரியத்தைக் குறிப்பிட்டு நம் சோதனைக்குட்படுத்தி, சமர்ப்பணம் செய்ய ஆரம்பித்து, தொடர்ந்து வந்தால், இதனுடன் சம்பந்தப்பட்ட எரிச்சலான காரியங்கள் விலகிவிட்டதைப் பார்க்கலாம்.



கடைக்குப் போக ஆரம்பித்தால் அதற்குத் தேவையான சந்தர்ப்பங்கள் அனைத்தும் தாமே பொருந்தி அமைந்து, செயல் சிறப்பாக இருக்கும். பொருத்தத்தில் ஆரம்பித்து, நம் மனதில் இல்லாத சிறப்புகள் எல்லாம் இந்தச் செயலில் ஒன்று ஒன்றாய் வெளிப்படும்.


டிக்ஷனரி வாங்குவதையே எடுத்துக் கொள்வோம். நாம் கடைக்குப் போய் டிக்ஷனரி வேண்டும் என்றவுடன், புதிய பதிப்பு ஒன்று வந்திருக்கிறது. பழைய பதிப்பில் 1920 ஆண்டு வரையுள்ள சொற்கள் சேர்க்கப்பட்டன. இதில் 1952 வரையுள்ள புதிய சேர்க்கையுள்ளது' என்ற சேதி கிடைக்கும்.


டிக்ஷனரியையும், அதற்கு உரிய மற்றவைகளையும் எடுத்துக்கொண்டு ஒரு சேல்ஸ்மேன் உங்களை வந்து ஆபீஸில் சந்திக்கும் வினோதமும் தெரியும். நினைவில் தட்டுப்பட முடியாதபடி ஒரு நண்பர் வந்து எந்த டிக்ஷனரியை நாம் வாங்க வேண்டும் என விருப்பப்பட்டோமோ அதையே கொண்டுவந்து அன்பளிப்பாகவும் கொடுப்பதைப் பார்க்கலாம். அடுத்தடுத்து நம்ப முடியாத செயல்கள் கடைக்குப் போவது' என்ற இக்காரியத்தில் தொடர்ந்து நடக்கும்.





சோதனைக்காகத் தெரிந்தெடுத்த செயல் "கடைக்குப் போவது"- சமர்ப்பணத்தை முழுமையாக இங்கு மேற்கொள்கிறோம். அன்னையின் பூரண வெளிப்பாட்டை இங்கு மட்டுமே காண முடியும். மற்ற செயல்கள் என்றும் போலிருக்கும். அழைப்பையும் சமர்ப்பணத்துடன் இணைத்து விட்டால் இதற்கடுத்த கட்டத்திலும் நிகழ்ச்சிகள் ஏற்படும்.




       Next Book Reading Program on , August 17 , 2012 @ Auromere Meditation Center  ( 5.30 - 6.00 PM)


Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

No comments:

Post a Comment

Followers