Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Friday, May 25, 2012

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - Part 15


ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,
வணக்கம். 
திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில முறைகளுக்கான, கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். 
-----------------------------------------------------------------------------------------------------
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ...........
-----------------------------------------------------------------------------------------------------

முறை 12 :
அன்பரில் உள்ள அன்னைக்குச் சரணம் செய்வது.

முறைக்கான விளக்கம் :

மனிதன் என்பவன் அகந்தையாலானவன். நாம் டெல்லியில் குடியிருந்தாலோ, அமெரிக்காவிலிருப்பதாலோ, தமிழ் மறந்து போவதில்லை. இங்கிலீஷில் பேசினாலும் சிந்தனை தமிழில்தானிருக்கும். 12 x 8 = 96 என்பதை மனம் தமிழில்தான் சொல்லும். தமிழ் பிறந்த பிறகு கற்றது. அகந்தை ஏற்பட்டதால்தான் பிறந்தோம். அகந்தை இல்லாவிட்டால், பிறப்பில்லை. நான் சமர்ப்பணம் செய்வதால், சரணம் செய்வதால் பெரியவன் என நினைப்பது அகந்தை. அது அடுத்தவர்க்குச் சரணம் செய்ய அனுமதிக்காது. அன்னையிடம் உள்ள பணிவு அன்பரிடம் கர்வமாக மாறும். எல்லா ஜீவாத்மாக்களும் என்னுள் இருக்கின்றன, நான் அவர்கள் அனைவர் உள்ளும் இருக்கிறேன் என்பது உபநிஷதம். அன்பரில் உள்ள அன்னைக்குச் சரணம் செய்தால், அந்தத் தத்துவத்தை ஏற்பதாகும். அது ரிஷிகள் நிலை. சிவபெருமான் சண்டாளனாக வந்தபொழுது சங்கரர் சண்டாளனைக் கண்டார். நம்மால் அன்பரில் அன்னையைக் காண முடியுமா?

  • பல சமயங்களில் புதிதாக ஓர் அன்பரைக் கண்டால், அன்னையைக் கண்டதுபோல் மனம் நெகிழ்கிறது. அது அப்படிப்பட்டத் தருணம்.
  • எவர் சொல்வதும் அன்னை பேசுவதாகும் என்பது பலிப்பதைக் காண்கிறோம்.
  • எவருக்குத் தவறு செய்தாலும் அன்னைக்குத் தவறு செய்ததாகும் என்பது மனிதருள் அன்னையைக் காண்பதாகும். காண்பது பல நிலைகளில் உள்ளது:
  • மனம் காண்பது உருவம்.
  • உணர்வு காண்பது குணம்.
  • உடல் அறிவது செயல்.
  • ஆத்மா விழிப்பற்ற நிலையிலிருப்பதால் காண்பதில்லை.
  • அது விழிப்புற்றுக் கண்டால் ஜோதியைக் காணும்.
  • அன்னைபக்தி அன்பரில் அன்னையைக் காணும்.
  • நமக்கு அன்பர் அன்னையாகத் தெரியவில்லை, அன்பராகவே தெரிகிறார் என்றால், அவர் கூறுவதை அன்னை கூறுவதாக ஏற்றுச் செயல்பட்டால், அவர் சொல் அன்னைசொல்போல் பலிப்பதைக் காணலாம்.
  • அன்பரில் அன்னையைக் கண்டால் அடுத்த கட்டத்தில் அனைத்திலும் அன்னையைக் காணலாம்.
  • அது அலிப்பூரில் பகவான் பெற்ற தரிசனம் தரும்.
  • அவர் பெற்றது நாராயண தரிசனம்.
  • நாம் பெறுவது ஸ்ரீ அரவிந்த தரிசனம்.
  • அன்பர் நெஞ்சில் அன்னை தெரிவது சூட்சுமத் தரிசனம்.
  • அது தெரிந்த பிறகு நமது திட்டங்கள் மறந்து போகும்.
  • மறந்து போனவை கேட்காமல், நினைக்காமல் பலிக்கும்.
  • பலித்தபின் திட்டம் பலித்த உணர்விருக்காது.
  • அன்னை பலித்த நெகிழ்வு இருக்கும்.
  • அன்னையைக் கண்டபின் அடுத்தது நினைவு வாராது.
  • அது பெரிய நிலை.
  • அந்நிலையில் அனைத்தும் அழகாகத் தெரியும்; விகாரமும், கோரமும் வினோதமான அழகு; அவை அழகின் சிறந்த அம்சம் எனத் தெரியும்.
  • .............................தொடரும்.

Download the Audio Format of this book by clicking the following link.
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

Thanks,
AuroMere Meditation Center ,
Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India

No comments:

Post a Comment

Followers