Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Tuesday, May 1, 2012

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - 4


ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,

வணக்கம். 
திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில முறைகளுக்கான, கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். 

-----------------------------------------------------------------------------------------------------
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ...........
-----------------------------------------------------------------------------------------------------

முறை 2 :

எது உனக்குச் சிறந்த முறையோ அதை அளவுகடந்துப் பின்பற்று.

முறைக்கான விளக்கம் :

                
இங்கு 90க்கும் மேற்பட்ட முறைகளைக் கூறினேன். இதுபோல் மேலும் பல முறைகளை நாம் நினைவுகூர முடியும். நாம் எதிர்பார்க்கும் அளவுகடந்த பெரிய பலன்பெற ஒரு முறை போதும். அம்முறையைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதே நிபந்தனை. முறை சுத்தம் செய்வதாக இருக்கலாம். பெருக்கித் துடைப்பது நமக்குச் சுத்தம். சுத்தமான இடங்களை இன்று ஏராளமாகப் பார்க்கலாம். அந்தச் சுத்தமும் அடுத்த கட்டம் போக முடியும். தரையைச் சுத்தம் செய்வது; மேஜை, நாற்காலியைத் துடைப்பது; அவற்றிற்கு அடியில் துடைப்பது; வெள்ளையடிப்பது; சீப்பு, சோப்புப் பெட்டியைக் கழுவுவது; பல் விளக்கும் பிரஷ்ஷை சர்ஃப் போட்டு கழுவுவது என 10 முதல் 20 கட்டங்களை ஏற்படுத்தி, அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

எரிச்சல் படக்கூடாது என்பது முறையானால், எரிச்சல் மனத்திலும் எழக் கூடாது; ஒரு முறையும் உள்ளே தவறக் கூடாது.

(உ.ம்.): நம்மால் முடிந்ததை 100% செய்து முடித்தால், அன்னை செயல்படுவார்.

மனிதச் சுபாவம் சிருஷ்டியின் இரகஸ்யத்துள் ஒன்று. அடுத்தது சொரூபம். இன்று பேச்சுவழக்கில் என்னைக் கிளறாதே, என்சொரூபம் வெளிவரும்' என்று நெகட்டிவ் பொருளில் பேசுகிறோம். ஜீவாத்மா, பரமாத்மாவிலிருந்து எழுந்த ரகஸ்யம் பெரியது. அதை Theory of evolution சிருஷ்டியின் இரகஸ்யமாக பகவான் விளக்கும்பொழுது சொரூபம், சுபாவம் இரண்டின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறார். P.313 The Life Divineஇல் இதுவே சிருஷ்டியின் முழுமுறை (This is the complete process of creation) என்கிறார். அதற்குமுன் இவையிரண்டையும் குறிப்பிடுகிறார். சுபாவத்தை மாற்ற முடியாது, மாற்றக்கூடாதுஎன்று மரபு கூறும்பொழுது,

பகவான் அதை தெய்வீகச் சுபாவமாக மாற்ற வேண்டும், ஆனால் அதை எதிர்க்கக்கூடாது. அதையொட்டியே யோகம் செய்ய வேண்டும் என்கிறார். அதனால் இது பெரிய கருத்து. பெரியக் கருத்தைப் பெரியதாக அறிந்து, பெரியதாகப் பின்பற்றும் முறையை இப்படிக் கூறினேன். முறை முக்கியம். அதைவிட அதைப் பின்பற்றும் மனநிலை முக்கியம். மனநிலை சரியாக இருக்க, மனம் அதை அறிய வேண்டும். அறிவது, புரிவது; புரிவது, சாதிப்பது.

..............................தொடரும்.

Download the Audio Format of this book by clicking the following link.
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

Thanks,
AuroMere Meditation Center , (Sri Annai Aravindar Center)
Pallikaranai, Chennai, India

No comments:

Post a Comment

Followers