Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Friday, March 23, 2012

ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் கருத்துக்கள் - (Views of Sri Mother & Sri Aurobindo - 1) உடல்நலன்


உடல்நலன் பற்றிய ஸ்ரீ அன்னை, 
ஸ்ரீ அரவிந்தரின் கருத்துக்கள் - 1 

  • உடல் எப்பொழுதும் நலமாக இருக்கிறது. அதன் நலத்தை அதிகரிக்கும் அவசியம் இல்லை என்பது ஸ்ரீ அன்னை, ஸ்ரீ பகவான் கருத்து.
  • மனம் குறுக்கிட்டு உடலின் போக்கை மாற்றும்பொழுது உடலுக்குச் சோர்வு ஏற்படுகிறது.
  • மனம் என்பது உலகில் உற்பத்தியானபின், அதன் ஆட்சியில் உலகம் வந்து விட்டது. அதற்கு உடலும், மற்ற ஜடப்பொருட்களும் உட்பட்டன. மனம் என்பது ஜீவனின் ஒரு பகுதி. அது ஆட்சி செய்ய ஆரம்பித்தால் அதன் ஆட்சியில் நியாயம் இருக்க முடியாது. 
  • உலகம் ஏற்பட்ட முதலில், ஜடம் சுதந்திரமாய் வாழ்ந்தது. உணர்வு எழுந்தபின் ஜடம் சுதந்திரத்தை இழந்தது. மனம் வந்தபின் ஜடம் கடுமைக்கு உட்படுத்தப்பட்ட்டது.
  • இவ்வாறு நெடுநாளாய் துன்பப்படும் மனம் தன்னைக் கொடுமைப்படுத்துவதை மட்டுமே எதிர்பார்க்கிறது என்கிறார் அன்னை.
  • ஆயிரத்தில் ஒன்றே நோய். மற்றவை நாம் ஏற்படுத்துபவை என்கிறார் அன்னை.
  • உடல் மனத்திற்கு கட்டுப்பட்டது என்பதற்கு விளக்கமோ உதாரணமோ தேவையில்லை.  ரப்பர் பாம்பு மேலே பட்டவுடன் உடல் பதறுகிறது. மனம் நம்புவதை உடல் ஏற்கிறது.
  • உடலுக்கு நோய் இல்லை. நோய் வந்தாலும் தானே குணப்படுத்திக் கொள்ளவல்லது.
  • உடலை அதிகமாகக் கவனித்தால் நோயுறும்.


உடல் நோய்வாய்ப்பட்டால் அதைக் குணப்படுத்த அன்னை கூறும் வழிகளைக் காண்போம்......

ஸ்ரீ அன்னை, அரவிந்தரின் கருத்துக்கள் தொடரும்...........



 Reference Book : Venugaanam - By Thiru Karmayogi Avarkal



No comments:

Post a Comment

Followers