Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Monday, June 24, 2013

ஸ்ரீ அன்னையின் அற்புதங்கள் - 11

ஸ்ரீ அன்னையின் அற்புதங்கள் - 11



உடலின் பெருமையை இடையறாது பேசியவர் அன்னை. தெய்வங்களுக்கும் அதன் பெருமையை வலியுறுத்திக் கூறினார் அன்னை.

அன்னையை வணங்க ஆரம்பித்தபின் நோய் குறைவது வழக்கம். ஓரிரு ஆண்டுகளுக்குப்பின் (medical bill) டாக்டர் செலவு இப்பொழுது இல்லை என்று பலரும் சொல்வதுண்டு.

பிரார்த்தனையால் நோயைக் குணப்படுத்துவது ஒரு பழக்கம். நமக்கு நோய் என்று ஏற்பட்டால் மருந்து சாப்பிடுவதுண்டு, பிரார்த்தனை செய்வதுண்டு. மருந்தையும், பிரார்த்தனையையும் ஏற்றுக்கொள்வதுண்டு. அன்னையின் சக்தி நோயைக் குணப்படுத்த பிரார்த்தனை மூலம் செயல்படுவதுபோல், நம்பிக்கை மூலமும் செயல்படும். ஒளியாகப் பரவி நோயை அழிப்பதுண்டு; சாந்தியாகப் பொழிந்து நோயைக் கரைப்பது ஒரு வகை. சக்தியாக உடலில் நுழைந்து விரட்டுவதும் வழக்கம். நோயின் மூலமான பயத்தை அழித்து, அதன் மூலமாக குணம் ஏற்படும். நோயின் காரணமான கர்மத்தை விலக்கி, குணம் ஏற்படும். தவறான நம்பிக்கையால் நோய் ஏற்பட்டிருந்தால், அன்னையின் சக்தி அந்தத் தவற்றை விலக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி நோயை அகற்றுவதுண்டு. பலருடைய பிரார்த்தனை ஒருவரைக் காப்பாற்றியதுண்டு. பிறருடைய பிரார்த்தனை பலித்ததுண்டு. பூவின் சிறப்பை உணர்ந்தால், அதன் மூலம் சிரமம் விலகும். Blessing packetஇன் மகிமையால் குணம் ஏற்படுகிறது. (Heart attack) ஹிருதய நோய் என்று ஏற்பட்டது, அதில்லை என்றாகி, வேறொரு சிறிய கோளாறு என்று மாறி விலகுவதுண்டு.

  • தொடர்ந்து ஆசிரமம் வருவதால் உடல் திறம் பெற்று நெடுநாட்களாக இருந்த தீராத வியாதி முயற்சியின்றி தானே மறைந்தது உண்டு. ஆப்பரேஷனுக்கு நாள் குறித்தபின் அன்னை பிரசாதம், ஆப்பரேஷன் தேவையில்லை என்ற நிலைமையைப் பலருக்கு ஏற்படுத்தியதுண்டு. எந்த மருந்துக்கும், எந்த டாக்டருக்கும் கட்டுப்படாத வியாதி அன்னையின் பிரசாதத்திற்கும் கட்டுப்படாத நிலையில், எந்தக் குணத்தால் அது ஏற்பட்டதோ அதை மாற்றிக் கொள்ள முன்வந்தவுடன் பிரசாதத்திற்குப் பலனாகக் குணமாவது உண்டு.
  • உடலில் வியாதி எதுவும் இல்லாமல், தெம்பும் திறனும் நாளாவட்டத்தில் அழிந்து வந்து, இனி அதிக நாள் உயிருடன் இருக்க முடியாது என்ற நிலையில் அன்னைக்கு பிரார்த்தனை செய்தால், அன்னையின் சக்தி உடலுள் பாய்ந்து, 3ஆம் நாள் முழுப் பலமும் வந்ததுண்டு. 
  • குழந்தையின் தீராத வயிற்றுப்போக்கு பிரசாதம் வந்ததால் நின்று, பின் தொடர்ந்தபோது, பிரசாதப் பாக்கெட்டைக் குழந்தை மீது வைத்தவுடன் முழுமையாக நின்றதுண்டு. 
  • ஆக்ஸிஜன் (oxygen) கொடுத்த நிலையில் ரிடையர் ஆன கடைநிலை ஊழியரின் எலும்பும், தோலுமான உடல் அன்னையின் சக்தியை மறைமுகமாகப் பெற்று, 3 மணி நேரத்தில் ஆஸ்பத்திரியிலிருந்து வெளிவந்து, அதன்பின் 25 வருஷம் உயிரோடிருந்ததுண்டு. 
  • இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட பெரிய ஆஸ்பத்திரியில் இளம்பிள்ளை வாத வார்டில் மிகக் கடினமான கேஸாகச் சேர்க்கப்பட்ட 3 வயது குழந்தை, வார்டிருந்து 3 நாளில் முதல் கேஸாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது உண்டு. 8 வருஷமாக சித்த சுவாதீனமிழந்து எல்லா வைத்தியங்களுக்குப்பின் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த மனநோயாளி, உறவினரால் சமாதி அருகில் தினமும் ஒரு முறையாவது 30 நாள் பிரார்த்தனை செய்ததின் பலனாக, இந்தப் பெண்ணை இப்போது பார்த்தால் ஒரு காலத்தில் சுவாதீனம் இழந்தவர் என்று சொல்ல முடியாது' என்ற அளவுக்கு குணமாகி, தீபாவளிப் பண்டிகையை முறையாகக் கொண்டாடியதுண்டு
  • நூறு கோடிக்கு அதிபதியான ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அரை மணி நேரத்தில் மருந்து கொடுக்காவிட்டால் ஆபத்து என்ற நிலை வந்து, அவருடைய சொந்த ஆஸ்பத்திரியாலும் குணப்படுத்த முடியாத ஆபத்தான அந்த வியாதியை நீண்டநாள் அனுபவித்தவர், 5 மணிக்குச் சமாதி அருகில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்து 5 3/4 மணிக்கு எழுந்து முழு விடுதலை பெற்றதுண்டு. 
  • முதுகில் உள்ள கட்டியை ஆப்பரேஷன் செய்யுமுன் சமாதிக்கு வர வேண்டுமென வந்து, வீட்டுக்குப் போனவுடன் 10 வருஷமாக இருந்த கட்டி (cyst) தானே உடைந்தது உண்டு.
  • ஒரு மாதமாகச் சாப்பிடும்பொழுதெல்லாம் புரையேறிக் கொண்டிருந்த குழந்தைக்கு அன்னை பெயரைத் தாயார் சொல்ல ஆரம்பித்தபின் 15 தரம் புரை ஏறியது 2 தரமாகக் குறைந்ததுண்டு.
  • 15 வருஷமான முதுகுவலி அன்னையைத் தரிசித்தபின் பிரார்த்தனை செய்யாமலே மறைந்ததுண்டு.



உடலுக்குச் சொந்தமாக அபரிமிதமான சக்தியுண்டு. ஆபத்துக் காலங்களில் உடல் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதைப் பார்த்தால் அது தெரியும். கணக்கில்லாத திறமைகளைப் பயன்படுத்தி தன்னை மனிதன் ஆபத்துச் சமயங்களில் காத்துக்கொள்கிறான். ஆபத்து விலகியபின் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது என்று சொல்வதுண்டு. அறிவு, உடல் விஷயத்தில் குறிக்கிட்டு வம்பு செய்யவில்லை என்றால் உடலுக்கு நோய் வருவது குறைவு என்பது ஸ்ரீ அரவிந்தர் கூற்று. ஸ்ரீ அரவிந்தரே ஓர் உதாரணம் கொடுக்கின்றார். ஒரு பெண்ணுக்குக் கான்சர் முற்றியபின் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் டாக்டர்கள் அப்பெண்ணிடம் கேன்சர் குணமாகிவிட்டது என்று பொய் சொல்லிவிட்டனர். அதை அவர் நம்பினார். கான்சரும் விலகியது. மனதின் குறுக்கீடு விலகினால், உடல் தன்னை குணம் செய்துகொள்ளும் திறனுடையது. டாக்டர்களும் இந்த முடிவுக்கு வந்துவிட்டார்கள். உடல் தன்னைக் குணப்படுத்த முடிவு செய்தால் மட்டுமே நோய் தீரும் என்பதை மருத்துவ உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

நோய் எதுவானாலும் பொதுவான பிரார்த்தனை தீவிரமாக இருந்தால், வேறெந்த முறையும் தேவையில்லை. அந்தப் பிரார்த்தனை- யின் தீவிரம் எந்த நோயையும் பூரணமாகக் குணப்படுத்தும்.

நோய் ஏற்பட்டால் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தல்; ஆசிரமத்திற்கு எழுதிப் பிரசாதம் பெறுதல்; ஒளியை, சாந்தியை அழைத்து உடலையும், நோயுற்ற பாகத்தையும் நிரப்புதல்; அன்னையின் கையால் நோயுற்ற பாகத்தைத் தடவிக் கொடுப்பதாக நினைப்பது போன்றவை பலன் தரும். இவ்வளவு செய்தும் நோய் போதிய அளவு குணமாகாவிட்டால் என்ன செய்யலாம் என்ற கேள்வியைக் கேட்க வேண்டிய சந்தர்ப்பத்தை அன்னை கொடுத்ததில்லை.

உடலுக்கு நோய் என்று வந்தவுடன், மாத்திரை நினைவு வராமல், டாக்டர் நினைவு வராமல், பயம் ஏற்படாமல், கவலையுண்டாகாமல், அன்னை நினைவு வந்தால் அன்னையை உடல் நினைவு வைத்திருக்கிறதாகக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Followers