Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Monday, October 15, 2012

அற்புதம் அன்றாடம் நடக்குமா? - Message of the Day, Oct 15, 2012


  


போன் என்பதை முதலில் பார்க்கும்பொழுது அது அற்புதமாக இருக்கிறது. ரேடியோ, TV, மோட்டார், கார், கம்ப்யூட்டர் ஆகிய அனைத்து விஞ்ஞானச் சாதனங்களும் புதிதில் அற்புதமாக இருக்கின்றன. அவை எப்படி இயங்குகின்றன என அறிந்தபின், அவற்றை அனைவரும் பயன்படுத்த ஆரம்பித்ததாலும் அவை சகஜமாகின்றன. "அன்றாடம் அவற்றை எங்கும் காண்கிறோம்''.


தொலைந்த பர்ஸைத் தேடுவது, வந்த வியாதியைக் குணப்படுத்துவது, தீராது என நாமறிந்து கொண்ட வியாதியை அனுபவிப்பது, பற்றாக்குறை வருமானத்தில் குடும்பம் நடத்துவது, கொடுமையான boss முதலாளியிடம் வேலை செய்வது, நம் நிலைக்கு மேலுள்ள ஆசை மனதில் எழுந்தபின் ஏக்கமடைவது ஆகியவை அன்றாட அனுபவம்.


பர்ஸ் உடனே கிடைப்பது, வியாதி ஒரே நாளில் மறைவது, தீராதவியாதி தீருவது, சிறுவருமானம் பெருகுவது, கடுமையான முதலாளி இனிமையாக நடப்பது, நிலைக்கு மேற்பட்ட ஆசை பூர்த்தியாவது அற்புதம்.


நாமுள்ள வாழ்வு நிலைக்கு ஒரு சட்டம் உண்டு. அதற்கு, பொருள் தொலைவது, வியாதி வருவது, பற்றாக்குறை, கொடுமை, தீராத ஆசை ஆகியவை இயல்பு. நமக்கு மேற்பட்ட வாழ்வுண்டு. அதற்குரிய சட்டம் உயர்ந்தது. அதற்கு, பொருள் தொலையாது, வியாதி வாராது, கடுமை எழாது.அந்தச் சட்டம் செயல்பட்டால் இன்று அற்புதம் என்பது அன்று அற்புதமில்லாமல் சகஜ நிகழ்ச்சியாகும். நாம் அந்தச் சட்டத்தை அறியும்வரை அச்சட்டத்தின் சக்தியை, அன்னையை, அழைத்தால் அற்புதம் அன்றாட நிகழ்ச்சியாகும்.


விஷயத்தை நினைத்தால் நம் சட்டம் செயல்படும். அன்னையை விஷயம் மனதில் எழுமுன் நினைத்தால், அன்னை சட்டம் செயல்படும். பல வருஷமாக இதைக் கேட்டவருக்குச் சலிப்பு ஏற்பட்டதே தவிர அற்புதம் நடக்கவில்லை. மனம் விஷயத்திலிருந்து அன்னைக்கு மாறியவுடன் அற்புதம் நடந்தது. அதைப் பெற்றவர்கள் சிலர்.
650ருபாய் சம்பளத்திலிருந்து 2000 ருபாய் சம்பளத்திற்கு போனார் ஒருவர்.


1000 ருபாய் சம்பாதிக்கும் பெண்ணை அமெரிக்காவில் வசிக்கும் பிள்ளை மணந்தார். M.Phil-இல் இடம் கிடைக்காதவருக்கு Ph.D எடுத்தபின் கிடைக்கும் விருது வந்தது.

-பிரார்த்தனை பலிக்க வேண்டும்- Sri Karmayogi Avarkal.

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam Spirituality and Prosperity ஆன்மீகமும் ஐஸ்வர்யமும் » 05 . பகுதி - 4
       

No comments:

Post a Comment

Followers